Latest Articles

Home Design

வீதி விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வீதி விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் அம்பலன்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பெண் சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்ட்டது 

இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

அத்துடன்கொழும்பு வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார். 

இதனையடுத்து கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 


No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia